Header Ads



சவூதி அரேபியாவில் வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்ட இலங்கை பெண் (படம்)


(தினகரன்) சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகர் வீடொன்றுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற அக்கரைப்பற்று வேலாமரத்து வெளியைச் சேர்ந்த ஹுஸைன் சித்தி சபிலா வயது 22 என்ற யுவதி வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்டு, உடலில் காயங்களுடன் நாடு திரும்பி, தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6ம் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைசபெற்று வருகின்றார்.

கடந்த 10 மாதங்களாக வீட்டுக்குப் பணமோ, தன்னைப் பற்றிய தகவல்களோ அனுப்படாத நிலையில், பெற்றோர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக 10 மாதங்களின் பின் எஜமானியின் நடவடிக்கைகள் பற்றி தான் அறிந்து கொண்டதாகவும், வீட்டுக்கு எனது சம்பளத்தை அனுப்பாமல் ஏமாற்றி உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனக்குரிய சம்பளத்தை வழங்குமாறு எஜமானியிடம் கேட்ட போது தன்னைக் கடுமையாக துன்புறுத்தி உடலில் காயங்களையும் ஏற்படுத்தியதாகவும் சித்தி சபிலா தெரிவித்தார்.

பெற்றோர் எடுத்துக் கொண்ட முயற்சியினாலேயே நாடு திரும்பியதாகவும் தன்னை அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சப் ஏஜென்ஸி சவூதிக்கு அனுப்பியதாகவும் சபிலா தெரிவித்தார்.

3 comments:

  1. இங்கு இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று. ஏற்கனவே ஏஜன்ட் காரன் பணத்தைப்பெற்று விட்டான் மற்றது வீட்டுக்கு ஆள் தேடும் முஸ்லிமிடத்தில் இஸ்லாம் இல்லை என்பதே! இஸ்லாமில்லாதவரிடத்தில் நற்பன்புகளும் இருக்காது.அத்துடன் இவைகளை வெளிக்கொனர்ந்து அரபுகளுக்கு ஆள் அனுப்பும் கயவர்களை காட்டிக்கொடுப்பதுடன் இலங்கையில் முஸ்லிம்களிடத்தில் கைதொழிலை ஊக்குவிக்கவும் வேண்டும்.

    ReplyDelete
  2. ஆகமொத்தத்தில் உங்கள் பெண்பிள்ளைகளை வெளிநாடு அனுப்பித்தான் நீங்கள் சாப்பிடவேண்டும், வாழவேண்டுமாயின் நீங்கள் இருப்பதைவிட இறப்பதுமேல், ஏன் தெரியுமா நீங்களே உங்கள் பெண்பிள்ளைகளை கெட்டுப்போகவும் அவர்களுக்கு பலவகையிலும் அனியாயங்கள் நடக்கவும் நீங்களாகவே வழிகளை உருவாக்கிக்கொடுக்கின்றீர்கள் பெற்றோர்களே.

    இதற்குமுன் நடந்தவைகள் ஏதோ நடந்துவிட்டது இனிமேல் இலங்கையிலிருட்ந்து ஒரு பெண்கூட தனிமையாக உழப்பதற்காக அனுப்பவேண்டாம். அதில் 99 வீதம் கேடுதான் உண்டாகின்றது.

    அத்துடன் மனைவியை வெளினாடு அனுப்பும் கணவன்:
    இவரை விரிவாக விபரிக்கத்தேவையில்லை ஒன்றேயொன்றுதான் சொல்லவேண்டியுள்ளது. இவர் சரியான ஆண்மகனில்லை, பொண்டாட்டியை வெளினாடு அனுப்பி வீட்டிலிருந்து சாப்பிடுபவன் கண்டிப்பாக நல்லவனல்ல, அவன் அங்கவீனனாகவிருந்தாலும் தன்பொண்டாட்டியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்ககூடிய மன்னிலையடையவன். மொத்தத்தில் பொண்டாட்டியை வெளினாட்டு அனுப்புபவன் அவளை தன்சுயனலத்திற்காக வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்கின்றான் இதுதான் உண்மை....

    இதில் தரகர்களின் நிலைமை சொல்லவே வேண்டாம் இவர்களுக்கு நீங்களே என்னென்ன மோசமானதை சொல்லவேண்டுமோ சொல்லிக்கொள்ளலாம் ஏனென்றால் வெளினாடு செல்லும் பெண்ணின் தாய்தந்தையரைவிட அவளை அனுப்புவதற்கு தூண்டும் அனுப்பிவைக்க கூட்டிச்செல்லும் தரகர்களுக்குத்தெரியும் அப்பெண்ணுக்கு என்னென்ன நடக்கப்போகின்றதென்று...

    இவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இவைகளொவ்வொன்றிற்கும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இறைவனிடம் பதில்சொல்லியே தீரவேண்டும்....

    ReplyDelete
  3. edallam orukaranama ????? but angal an sethanam adukirarhal ????? edai ketal nan ennoda sister ku kodutha adan nan eduken ,,,, angal sithanam adupadai mudalil nerudugal appuran ksa makkal saium aniyanal thannala nikkum ,, sithanam than pengal welinadu seilla karanam

    ReplyDelete

Powered by Blogger.