Header Ads



கிண்ணியாவில் உளவளத்துணை, குடும்ப சமரசம் சம்பந்தமான செயலமர்வு


(மூதூர் முறாசில்)

எஸ்.எப்.எம். நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  உளவளத்துணை மற்றும் குடும்ப சமரசம் சம்பந்தமான இருநாள் செயலமர்வு கிண்ணியாவில் இடம்பெற்றது.

கிண்ணியா விஷன் மண்டபத்தில் எஸ்.எப்.எம். நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் முஹம்மட் மஹ்ரூப் தலைமையில்  இடம்பெற்ற இச்செயலமர்வில் சிகிச்சை உளவியலாளர் பி.அருமைத்துரை,தொழில் வழிகாட்டல் ஆலோசக உத்தியோகத்தர் ஏ.எம்.ஹதியத்துல்லா ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டனர்.

கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக நிறுவனங்களின் நிர்வாகிகள், மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் 40 பேர்கள் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.