Header Ads



கரந்தெணிய வீடொன்றில் 3 சடலங்கள் மீட்பு

கரந்தெணிய, கொட்டவெல 20 ஏக்கர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மூன்று சடலங்கள் மீ்ட்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோருடையது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். nf

No comments

Powered by Blogger.