Header Ads



ஹிஜாப்பை அகற்ற அதிபரும் வலியுறுத்து - அகற்றமாட்டேன் என ஆசிரியை உறுதி


களுத்துறையில் சிங்கள பாடசாலையொன்றில் ஆசிரியையாக பணியாற்றும் முஸ்லிம் சகோதரி ஒருவர் குறித்து ஜப்னா முஸ்லிம் இணையம் நேற்று    'நான் மௌத்தானாதான் என்ற ஹிஜாபை கழற்றமுடியும் - பிக்குவுக்கு ஆசிரியை பதிலடி' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது http://www.jaffnamuslim.com/2013/03/blog-post_2593.html செய்தி வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பில் அறிந்துகொள்வதற்காக குறித்த ஆசிரியையுடன் இன்று புதன்கிழமை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டோம்.

இதுதொடர்பில் அவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறியதாவது,

இன்று புதன்கிழமை நான் கற்பிக்கும் சிங்கள பாடசாலைக்கு ஹிஜாப்புடன் சென்றேன். சிங்கள ஆசிரியைகளில் சிலர் நான் ஹிஜாப் அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு ஆதரவு வெளியிட்டனர். மற்றும் சிலர் எதுவும் பேசவில்லை. இன்னும் சிலர் அதிபருடன் இதுபற்றி கதைக்குமாறு கூறினர்.

எனவே நான் அதிபர் காரியாலயத்திற்கு சென்றேன். ஆசிரியர் ஆலோசகரான பௌத்த தேரர் திங்கட்கிழமை, 25 ஆம் திகதி என்னை ஹிஜாப்பை அகற்றிவிட்டு வருமாறு கூறியதாக அதிபரிடம் கூறினேன்.

அதற்கு அதிபர், நீங்கள் ஹிஜாப்பை அகற்றிவிட்டு எமது பாடசாலைக்கு வருவதையே விரும்புகிறேன். நீங்கள் அவ்வாறுதான் வரவேண்டும் என்றார்.

அதற்கு நான், இல்லை என்னால் ஹிஜாப்பை அகற்றமுடியாது என வாதிட்டேன்.

இதன்போது குறக்கிட்ட அதிபர், இல்லை நீங்கள் ஹிஜாப்பை அகற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இதன்போது நான்,  அப்படியென்றால் நான் வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்ல அனுமதி வழங்குமாறு கூறினேன்.

அதற்கு அதிபர், அவ்வாறு இடமாற்றம் வழங்கமுடியாது. உங்கள் இடத்திற்குரிய மற்றுமொருவர் இந்த பாடசாலைக்கு வருவாராயின் அப்போதுதான் இடமாற்றம் தரமுடியுமென கூறினார்.

இந்நிலையில் நான் தற்போது மற்றுமொரு பாடசாலைக்கு இடமாற்றலாகிச்செல்ல முயற்சிக்கிறேன். இன்று புதன்கிழமை கோட்ட கல்வி அலுவலகம் சென்று இதுதொடர்பில் கலந்துரையாடினேன்.

எங்கு சென்றாலும், எந்த பாடசாலைக்கு மாற்றலாகசி சென்றாலும் நான் இன்னுடைய ஹிஜாப்பை விட்டுக்கொடுக்க மாட்டேன். அது எனது உரிமை. ஹிஜாப் அணிந்தபடியே நான் தொடர்ந்து செல்வேன் எனவும் அந்த ஆசிரியை உறுதிபட ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.


34 comments:

  1. Masha Allah we are proud of you sister. May Allah bless you.

    ReplyDelete
  2. Where is our bloody so called lawyers, Those who appeared on behalf of Gota for the Demolishing the Houses of poor Muslims in Slave Island. Why don't you come forward to assist these victims.

    ReplyDelete
  3. I hope all readers will should contribute their support specially financially if the case gone to the court. I assure I will be the first person to support.

    ReplyDelete
  4. .....sister isaallah allah help you.....கவலைப்பட வேண்டாம் . அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்கு ..உதவி செய்வான்...

    ReplyDelete
  5. Suwarkkathin Vasalai Adinthuviddar

    ReplyDelete
  6. சகோதரியே அளவற்ற அருளாளன் உன்னை ஒருபோதும் கைவிடமாடான்.

    முஸ்லிம்களையே நேசிக்கத் தெரியாத இந்த அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இறைவன் எவ்வளவு வழங்கியிருக்கும்போது, இறைவனேயே நேசிக்கும் உனக்கு அவனின் அருள் உன்மீதும், உன் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டும். ஆமீன்.

    அது உன்னையும், உன்மானத்தையும் காக்கும் ஆடை என்பதால் தொடர்ந்து அணிந்து கொள். சகோதரியே உன்னிடம் மேலதிகமாக சில இருக்குமென்றால் அதை நம் அமைச்சர்களுக்கு கொடுத்து விடு.

    உண்மையில் நம் சமூகத்தை பார்த்து கூனிக் குறுகி முகத்தை மூடி ஆடை அணிய வேண்டியது நம் அமைச்சர்கள்தான்.

    ஒரு புதிய தகவல் நம் அமைச்சர்கள் அந்நிய ஆண்களுடன் கதைக்க கூடாது என பாராளுமன்றத்தில் வாய் மூடி, கண்களை மூடி, காதுகளை மூடி "இத்தா" கடமை இருக்கிறார்களாம்.

    ReplyDelete
  7. Why cant muslim organaisation like muslim counsil and acju actj file the fundamental rights breach case and eve teasing case against the principle and that idiotic pi(MO)kku

    ReplyDelete
  8. அல்ஹம்துலில்லாஹ்!

    எனது அன்புற்கினிய இஸ்லாமிய‌ சகோதரியே அஸ்ஸலாமு அலைக்கும்.
    உங்களது இந்த செயல் எமக்கு ஸஹாபி பெண்களின் குணங்களை, அவர்களின் மார்க்கப்பற்றை உணர்த்துகிறது. எம்மில் பலர் இஸ்லாத்தை அற்ப சொற்ப விடயங்களுக்காக விற்கும் இக்காலத்தில் உங்களை போன்ற வீர பெண்களை பார்க்கும் போது உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்து போகிறது. உங்களில் எம் சமூகத்திற்க்கு பல‌ முன்மாதிரிகள் இருக்கிறது.
    சகோதரியே நான் எனது கடமையான தொழுகைகளின் பின்னால் பொதுவாக எனது குடும்பத்திற்கும் அனைத்து முஸ்லிம்களுக்குமே கேற்பேன். ஆனால் யார் என்று அறியாமல் இஸ்லாத்திற்காக வாழும் உங்களுக்காக‌ மட்டும் தான் நான் எனது பிரார்த்தனையில் பிரத்தியேகமாக கேட்டு உள்ளேன். இப்படிப்பட்ட என்னை போன்ற‌ பல பேரின் துஆக்கள் உங்களுக்கு உண்டு என்பதையும் நினைவு படுத்துகிறேன்,
    சகோதரியே நிச்சயமாக அல்லாஹ்வின் அருளும், உதவியும் உங்களுக்கு உண்டு என்பதை உறுதிபட கூறி கொள்கிறேன். அந்த சக்திக்கு முன்னால் இந்த சக்தி எல்லாம் ஒன்றுமே கிடையாது.
    உங்களது மரணத்தின் பின் கபன் இடும் அந்த நாளிலேயே உங்களது ஹிஜாப் உங்கள் உடலை விட்டு நீங்கும் அந்த‌ தருணமாக இருக்க வேண்டும் என்பதையும் உங்களுக்கு கூறிக்கொள்வதோடு, ஒரு இஸ்லாமிய சகோதரனாக என்னுடைய துஆவும் உங்களுக்கு உண்டு என்பதை நினைவு படுத்தி கொள்கிறேன்.
    ஜஃப்னா முஸ்லிம் அவர்களே இதனை முடியுமென்றால் அந்தச்ச்கோதரியிடம் எத்தி வையுங்கள்.

    ReplyDelete
  9. ஆட்சியும் அதிகாரமும் எமை படைத்தே இறைவனுக்கே சொந்தம் இந்த கேவலம் கெட்ட ........ களால் முஸ்லிம் சமூகத்தை ஒன்றும் பண்ண முடியாது அல்லாஹ்வின் தண்டனை நிச்சயம் அவர்களுக்கு கிடைக்கும். ask thua...

    ReplyDelete
  10. Allah, make our ummah firm in Islam, Insha Allah you will be helped

    ReplyDelete
  11. ஹிஜாப் போடக்கூடாது என்று சொன்னதற்ற்காக மாற்றலாகி செல்வது உங்களது பிரச்சினையை தற்காலிகமாகத் தீர்க்கும் ,ஆனால் வரும்போது இது தான் நடக்கும் எனவே தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் ,நாட்டின் சட்டவாக்கக்களாக உறுப்பினர்கள் ஒன்றிணைந்து (முஸ்லீம் ) சட்டத்தில் ஏலவே குறிப்பிடப்பட்டிருக்கின்ற ,மத சுதந்திர உரிமைகளை மீளக்கொடிட்டு காட்டவேண்டும் ,மட்டுமன்று சகல நிறுவனத்தளைவர்களுக்கும் இது சுற்று நிருபமாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    சிறியளவில் வாழ்கின்ற பிரதேசங்களில் இவ்வாறான சில நிகழ்வுகள் கொண்டே இருக்கின்றன.எனவே நாங்கள் தான் முஸ்லீம்களது பிரதி நிதிகள் என்று கூறிக்கொன்டு, இக்கட்டான இந்நிலைகளில் கதிரைகளை,குதிரையின் கடிவாளம்
    பிடிப்பது போல இருகப்பிடித்துக்கொண்டிருப்பவர்களே!இது உங்களது கவனத்திற்கு ,
    நீதி அமைச்சேரே! உங்கள் கவனத்திற்கு,"நீர் சார்ந்த சமூகத்தினை அழிக்கவல்ல,நீர்சார்ந்த சமூகத்தின் அமைதியான வாழ்வுக்கு இடையூறுகள் நடைபெறுகின்ற நேரத்தில் நீதியமைச்சராக நீர் முஸ்லீம் சமூகத்தவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகின்றீர்?

    உங்களது அமைச்சுப்பதவி நீங்கள் வபாத்தானதன் பின்னர் (எல்லோருக்கும் மரணம் உண்டு) முன்னாள்,தபால்,நீதித்துறை அமைச்சர் என்று 40ஆம் நாள் கத்முள் குரானின் போது அச்ச்சடித்துக்கொடுக்கப்படும் யாசீன் குரானின் மட்டையில் அச்சடிக்கவா? நீங்களல்லவா எங்களது மறுக்கப்பட்ட உரிமைகளை பிறரிடமிருந்து பறித்துதர வேண்டியவர்?பறிக்கவிட்டாலும் பரவாயில்லை,சுற்றிவர ஒரு வேலியாகவாவது இருக்கக்கூடாதா? இல்லா விட்டாலும் ஒரு இஸ்லாமிய பொது மகனாவது இருந்து கருத்து தெரிவிக்கலாமே?
    கொஞ்சம் குட்டிக்குட்டி கதைகளைக்கொண்டு வந்து அடுத்தமுறை தேர்தலின்போது மேடைகளில் நின்று மந்திரித்த மருந்தை தெளிப்பது போல் தெளித்து இந்த மந்தைகளை அழைத்துக்கொண்டு போகலாம் என்று மட்டும் நினைக்காதீங்க,உங்களது ரசித்த மக்கள் உங்களது கதைகளின் மறு பக்கத்தை புரட்டிப்பார்க்கின்றனர்.முழு முஸ்லீம் சமூகமும் நம்பியிருந்த முஸ்லீம் காங்கிரஸ் தம்மை கைவிட்டு விட்டதாக உணர்கின்றார்கள் என்ற செய்தியாவது உங்களுக்கு தெரியுமா?பொம்மைகள் சிரிக்கின்றன ஆனால் ஆடாது அசையாது ஏனென்றால் அதற்கு உனர்வில்லைஉயிரில்லை.

    ReplyDelete
  12. அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான்

    ReplyDelete
  13. Sister..., WE so proud of you.. May allah make UR life easy..

    ReplyDelete
  14. ALHAMTHULILLAH KEEP IT UP MAY ALLAH BLESS YOU SISTER

    ReplyDelete
  15. ALHAMTHULILLAH KEEP IT UP DON'T WORRY MAY ALLAH BLESS YOU SISTER

    ReplyDelete
  16. dear sister u reminds us saheedathul hijab marwa sherfini,she lost her life for hijab.do not give up, allah always with u.may allah bless u with courage & confident.

    ReplyDelete
  17. சகோதரி...., பயப்பட வேண்டாம்....... இறைவன் உங்களுடன்............

    அத்துடன் ஒரு தரம் நீதி அமைச்சர் ஹகீம் இடம் முறைப்பாடு ஒன்றை ஆதாரத்துடன் செய்யுங்கள்.....

    அவர்கள் ஹிஜாப் ஐ கலட்ட சொல்வதை RECORD பண்ணுங்கள்.......... இன வெறி BAUDHA னுகளை உலகம் அறியட்டும்.....

    ReplyDelete
  18. Please anyone help this sister get transfer another school.Of course allah with this sister but our brothers should help her.Not only pround enough here to say this sister,we should help her difficults moments.

    ReplyDelete
  19. சகோதரியே உங்களுக்கு எல்லா நிலமைகளிளும் அல்லாஹ் உதவி செய்வானாக!

    இதய் விட்டுக்கொடுக்காமல் இருதி வரைக்கும் அனைவரும் போராடுவோம்.

    ReplyDelete
  20. I think we need to bring these kind of harassment are to be recorded and brought in front of justice. We are in need of a volunteer team to bring this to justice. If any lawyers or volunteer organizations can extend their support, will be very welcomed and will be a timely helpful as we cant let this go like this. And also this is the civil right of every Sri Lankan Muslims.

    ReplyDelete
  21. இன்றைய நாள் முழுக்க எனக்கு இவரது நினைப்புத்தான் என் உள்ளம் ஒவ்வொறுகனமும் பிராதித்துகொண்டே இருக்கிறது இவரது போராட்டம் வெற்றி அடையும் வரை

    ReplyDelete
  22. masha allah...allah bless you sister.

    ReplyDelete
  23. thank you sister
    i veary happy

    ReplyDelete
  24. Dear Sisters; Masha Allah, we proud of you, bcz, ISLAM IS our breath, we vl pray 4 your demand.

    ReplyDelete
  25. Great may allah strengthen her imaan.

    Let me remind you there are many similar incidents happening every year before Technical collage or collage of education entry. where many of our sisters are not allowed to enter for study in collage unless they remove the habaya, hijab and wear saree like (you know what i mean and how sexy with that saree).

    I also know many sisters stop going to the collage and sacrifice their studies for the sake of Allah.

    ReplyDelete
  26. Masha Allah Keep It Up Allah will Help You Sister

    ReplyDelete
  27. ஹிஜாப் எங்கள் உயிர்; அது எங்கள ஈமான்; அது எங்கள் கற்பு; அது எங்கள் தக்வா அதனை அகற்ற எந்த அற்பனுக்கும் இடமளியோம். யா அல்லாஹ்!இஸ்லாத்தை எதிர்க்கும் அற்பர்கள் ஒழியட்டும்! அவர்கள் கூட்டம் அழியட்டும்! குடும்பத்தோடு சின்னாபின்னமாகட்டும்! அந்த அற்பர்களுக்கு யாரெல்லாம் பணம் கொடுத்து, பாதுகாப்பு வழங்கி, ஆசிர்வதிக்கிறார்களோ அவர்களும் குடும்பத்தோடு அழியட்டும்! முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் முனாபிக்குகளும் நாசமாகட்டும்! (நீங்களும் ஆமீன்! சொல்லுங்கள்)
    ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!
    ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்! ஆமீன்!

    ReplyDelete
  28. கொல்கையில் உருதியாய் இருக்கப் பிரார்த்திக்கிரேன்.எண்ணத்துக்குத் தான் கூலி இருக்கிரது அல்லாஹ்விடம்.so அல்லாஹ் உதவி செய்வான்.
    brother china fort

    ReplyDelete
  29. பாராட்டுவதற்கு மிச்சமில்லாமல் எமது சகோதரர்கள் பாராட்டிவிட்டார்கள் . உங்களைப் போன்ற கொள்கைக்கு முன்னால் உயிர்ப் பயம் இல்லாத முஸ்லிம் சமூகமே எமக்குத் தேவை.
    ஒரு வேண்டுகோள். எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு உங்கள் தைரியத்தில் 1 mg கொடுக்க மாட்டீர்களா? 1 மைக்ரோ கிராமாவது....

    ReplyDelete

Powered by Blogger.