Header Ads



அரசிற்கு முஸ்லிம்கள் தெளிவான செய்தி வழங்கியுள்ளனர் - முஜீபுர் ரஹ்மான்


அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளுக்கு மத்தியில் நாடு பூராகவும் வாழும் முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டித்து அரசாங்கத்திற்கு தெளிவான செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என முஜீபுர் ரஹ்மான்  ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது தெரிவித்தார். 

அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்,

முஸ்லிம் அமைச்சர்கள், மௌலவிமார் மற்றும் சில முஸ்லிம் அமைப்புக்கள் மூலம் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படவிருந்த ஹர்த்தால் நடவடிக்கையை முறியடிக்க அரசாங்கம் திட்டமிட்டது. எனினும் அரசாங்கத்தின் உபாயங்களுக்கு அடிபணியாமல் முஸ்லிம்கள் ஹர்த்தால் நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்திக்கொணடனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பூரண கடையடைப்பில் ஈடுபட்டு, ஹர்த்தால் நடவடிக்கையில் பங்கேற்றுள்ளனர்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பரவலாக முன்னெடுக்கப்படும் அரசாங்க ஆதரவு இனவாத செயற்பாட்டுக்கு  முஸ்லிம் சமூகம் சாத்வீக ரீதியில் போராடுகிறது.முஸ்லிம்களின் இந்த சாத்வீக போராட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்  முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தின் இந்த உணர்வுகளை அறிந்துகொள்ள வேண்டும்.

என்னை அச்சுறுத்தவதன் மூலம் இந்த ஹர்த்தால் நடவடிக்கையை முடக்கிவிடலாமென அரசாங்கம் கருதியது. எனக்கு பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. இவற்றையெல்லாம் கண்டு ஓடிவிடும் கோழை அல்ல நான்.

இந்த ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. இந்நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு நான் சொல்கிறேன். முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க நான் உறுதி பூண்டுள்ளேன. என்மீதான் பொலிஸ் விசாரணைகள் இதனை தடுத்துநிறுத்திவிட முடியாது எனவும் ஜப்னா முஸ்லிம்  இணையத்திற்கு முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

6 comments:

  1. நீங்கள் அல்லாஹ்வுடைய மார்கத்துக்கு உதவி செய்தால் அவன் உங்களுக்கும் உதவி செய்வான் அல்லாஹ செய்ய நாடியதை எவனாலும் தடுத்து நிறுத்த முடியுமா ?

    ReplyDelete
  2. இவர் என்ன பிபிஎஸ் போல் பொய்யை உண்மையாக்குகின்றார். இவர் அர்த்தால் தோல்விக்கண்டுள்ளது மலையத்தில் சகல முஸ்லிம் கடைகளும் திறக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது...

    ReplyDelete
  3. Thanks mujipu rakuman Brother

    ReplyDelete
  4. sri lanka muslims kalai vali nadatha thairiyamum vivahamum ula olungaana oruvar ilai, adiga maana muslim kalien nampikai petra ulama sabai arasaangathuku paynthu otrumai antra koosathai vachi amadiyaaha irukudu, sinna sinna muslim kulukal harthaal antrum adirpu nadavadikaikal antru thaniya saiyum adum vetri alikaadu, so plz ACJU N OTHER MUSLIMS ALL PARTY come to ONE roof. neengal ellorum samuga otumai aagungal 1st........next ALLAH WILL GIVE WIN TO MUSLIMS.

    ReplyDelete
  5. நிலைமை புரியாது உளரும் சிலரும் உண்மையை புரிந்து கொள்ள முடியாத சில போலிகளும் நம்மில் இருக்கும் வரை நமது சமூகம் என்று எழுச்சி பெற முடியாது சகோதரரே

    ReplyDelete
  6. You wanted to show the people that you also a leader like azad sally. This is the only concern if you really care about muslims join with all muslims and work together with ACJU.

    ReplyDelete

Powered by Blogger.