பெஷன்பக் நிறுவனத்திற்கு மற்றுமொரு அச்சறுத்தல்..!
பெபிலியானவில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான Fashion Bug நிறுவனத்திற்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்து பௌத்தபிக்குகளும், காடையர்களும் நிறுவனத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததோடு, அங்கிருந்த ஊழியர்களையும் தாறுமாறாக தாக்கி படுகாயப்படுத்தினர்.
பௌத்த பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தாக்குதல் சம்பவங்கள் குறித்த நிறுவனத்தின் CCTV கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையறிந்த பொலிஸார், Fashion Bug நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு CCTV இல் பதிவான வீடியோ காட்சிகளை எந்தவொரு ஊடகத்திற்கும் வழங்க வேண்டாமெனவும், இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாமெனவும் அச்சுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பௌத்த பிக்குகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் ஊழியர்களை தாக்கும் காட்சிகளும், சேதம்விளைவிக்கும் காட்சிகளும் மிகவும் தெளிவாகவே பதிவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இருந்து என்ன புரிகிறது. காக்கி உடுப்பை போட்டுக்கொண்டு முளு மனசும் எப்படி காவி உடுப்பு போட்ட சிங்கள குண்டர்களின் செயல்களை பாதுகாக்கலாம் என்பதுதான். இதெல்லாம் முப்படைத்தளபதியின் ஆசீர்வாதத்துடன் முப்படையால் மேற்கொள்ள படும் அட்டகாசங்கள். மூடி மறைக்க வேண்டுமா.
ReplyDeleteENNE NADURA ITHU,
ReplyDeleteInna lillahi wa inn ilahi raajioon
ReplyDelete