Header Ads



யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜெனிவாவில் ஐ.நாவின் தீர்மானத்துக்கு எதிரான கண்டனப் பேரணியொன்று இன்றையதினம் 20-03-2013 யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

முனீஸ்வரன் ஆலயப்பகுதியில் இருந்து ஆரம்பமான இப்பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் பதாதைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் முனீஸ்வரன் அங்காடியூடாக மத்திய பேரூந்து நிலையம் - மின்சார நிலைய வீதி  கஸ்தூரியார் வீதி வழியாக மீண்டும் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்தனர். 

தொடர்ந்து,  மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் வைத்து ஐ.நாவின் மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கொடும்பாவி பொதுமக்களால் எரியூட்டப்பட்டது. யாழ் குடாநாட்டின் அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்களும், சகோதர மொழி பேசும் மக்களும் பெருந்திரளாக இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 






No comments

Powered by Blogger.