Header Ads



ஜம்மியதுல் உலமா அடிக்கடி முரணான கருத்துக்களை வெளியிடுகிறது - பொதுபல சேனா


(ISBAHAN SHARFDEEN)

உலகில் எந்த ஒரு நாட்டிலும் அரசாங்கத்தின் மூலம் ஹலால் சான்றிதழ் விநியோகிக்கப்படுவதில்லை. எனவே, ஹலால் சான்றிதழ் விநியோகிப்பதை அரசுக்கு வழங்குவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என பொதுபலசேன தெரிவிக்கிறது.

அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் திலந்த விதானகே, ஜம்மியதுல் உலமா அமைப்பு அடிக்கடி ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என குறிப்பிடுகிறார்.

ஹலால் சான்றிதழ் விநியோகிப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை என்று கூறிய ஜம்மியதுல் உலமா அமைப்பு, பிறகு முஸ்லிம்களுக்கு மாத்திரம் விநியோகிக்கப் போவதாகக் கூறியது. நேற்று இதனை அரசுக்கு வழங்குவதாக கூறுவதன் மூலம் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து கேள்வி எழுவதாகவும் திலந்த விதானகே சுட்டிக் காட்டுகிறார்.

அரசாங்கத்தோடு எவ்வித பேச்சுவார்த்தையும் நடாத்தாது இப்படி அரசாங்கத்தின் பக்கம் தள்ளிவிடுவதால் பிரச்சினை தீராதென சுட்டிக்காட்டும் பொதுபலசேன அமைப்பு தாம் மத உரிமைகளை மதிப்பதாகவும் இது குறித்த தெளிவான பேச்சுவார்த்தை ஒன்றின் பின் தீர்வொன்றை பெற வேண்டும் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

9 comments:

  1. அங்கொடை Hospital போதாது..

    ReplyDelete
  2. Namathu Palaweenam Avarkalukkum Theliwaka Vilangi Vittadu.

    ReplyDelete
  3. புரிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை. அவ்வளவுதான்.
    அதுக்கெல்லாம் ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் டோய்....

    ReplyDelete
  4. namathu alla.
    Namathu mp and ministers and acju ivarkaludaya palaeenam.
    Pothu makkal naam palamaaka iruppoam.

    ReplyDelete
  5. விடிய ...விடிய ..ராமன் விடிந்து பார்த்தால் ராமனுக்கும் சீதைக்கும் என்னா முறை கதை தான் இவங்களோடு பேசுவது.எவலோவு விளங்கபடுதுனால்லும் இவெங்களுக்கு விளங்குவடுமில்லை விளங்கபோவடுமில்லை.
    முதலில் இவங்களுக்கு கலியாணம் முடித்து வாழ சொல்லவும்.

    ReplyDelete
  6. கன்னியமிக்க உலமாக்களின் பேசை புறிந்துகொள்ளவும் ஒரு இங்கிதம் வேண்டும் அது இல்லாத வெங்காயதுகெல்லாம் முறன்பாடாக தெறிவதில் என்ன ஆச்சரியம்???

    ReplyDelete
  7. ஒரு நேரத்துக்கு நினைக்கத் தோணுது "இவனுங்க காலில மாட்டின சுவிங் கம் (chewing gum) மாதிரி என்னு." எங்க இருந்தய்யா வந்தானுங்க!! கிணற்றுக்குள் இருந்து வந்துவிட்டு அது தான் உலகம் ஒனக்குத் தெரியாது என்றானுங்க.. இவனுங்கள லூசு என்பதா? இல்லாட்டி நாம லூசு என்பதா?

    ReplyDelete
  8. இவனுங்க தொல்ல தாங்க முடியெல!!

    ReplyDelete
  9. அதெண்டா உண்மைதான்.. அவனுங்க ஆரம்பத்தில இருந்து இப்ப வரை நாம என்ன சொன்னாலும் காதுக்க வாங்காம ஒரே வாய்ப்பாட்டைத் தான் சொல்லுறானுங்க!!!

    ReplyDelete

Powered by Blogger.