Header Ads



குர்ஆன் மனனப்போட்டியில் முதலிடம்பெற்ற றிஸ்கானுக்கு காத்தான்குடியில் கௌரவம்


(பளுலுல்லாஹ் பர்ஹான்)

சவூதியில் நடைபெற்று முடிந்த சர்வதேச அல்-குர்ஆன் மனனப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற 14வயது இலங்கை மாணவன் அல்-ஹாபிழ் முஹம்மது றிஸ்கானை காத்தான்குடி வாழ் மக்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சற்று நேரத்துக்கு முன்னர் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மாப்பள்ளிவாயலில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இங்கு சர்வதேச அல்-குர்ஆன் மனனப்போட்டியில் முதலாமிடத்தை சுவீகரித்துக் கொண்ட இலங்கை மாணவன் அல்-ஹாபிழ் முஹம்மது றிஸ்கான் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.

இப்பாராட்டு வைபவத்தில் உலமாக்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் ஊர்ப்பிரமுகர்கள் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.





No comments

Powered by Blogger.