Header Ads



'இன்று நீதிமன்றம் ஒரு மரண வீடாகியது' - சட்டத்தரணிகள் அறிவிப்பு

(Tm) கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்கு முன் சற்றுமுன் கூடிய சட்டத்தரணிகள் குழுவொன்று, 'இன்று நீதிமன்றம் ஒரு மரண வீடாகியது' எனக் கூறி மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். 


நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட மேற்படி சட்டத்தரணிகள் குழுவை அங்கு விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் பொலிஸார் அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரமாக வாக்குவாதம் இடம்பெற்றது. 

இதேவேளை, புதிய பிரதம நீதியரசருக்கு வாழ்த்து தெரிவித்து நீதிமன்ற வளாகத்துக்கு முன் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை அங்கிருந்து களைக்குமாறும் மேற்படி சட்டத்தரணிகள் குழுவினால் பொலிஸாரிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. 

அவர்களது வேண்டுகோளுக்கு பொலிஸார் செவிசாய்க்காத நிலையிலேயே, மெழுகுவர்த்திகளை ஏற்றி அமைதிப் போராட்டமொன்றில் சட்டத்தரணிகள் ஈடுபட்டு வருகின்றனர். 












No comments

Powered by Blogger.