Header Ads



புத்தளம் காஸிமிய்யா அரபு கல்லூரியில் ஜனாஸா தொடர்பிலான கருத்தரங்கு (படங்கள்)


(அபூ நாதில்)

ஜனாஸாவுடன் தொடர்புடைய குளிபாட்டுதல், கபனிடுதல், கப்று தோண்டுதல், அடக்கம் செய்தல், ஜனாஸா பற்றிய அறிவிப்பு செய்தல் உட்பட ஜனாஸா தொடர்பான பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய கலந்துரையாடலொன்று இன்று 27-0-11-2012 மாலை புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. 

காஸிமிய்யா அரபுக் கல்லூரி அதிபர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் புத்தளம் பெரிய பள்ளி தலைவர் எஸ். ஆர். எம். முஸம்மில் உட்பட ஜனாஸா தொடர்பான சேவையில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். 

ஜனாஸா தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்ட தோடு ஜனாஸா தொடர்டபான ஐயங்களுக்கும் தெளிவு வழங்கப்பட்டது. இவ்வாறான கலந்துரையாடல்களை பல்வேறு தரப்பாருக்கும் தொடராக நடாத்துவதென இங்கு தீர்மானிக்கப்பட்டது.    






No comments

Powered by Blogger.