Header Ads



கண்டி அல்-ஹம்ரா வித்தியாலய மாணவன் கிராஅத் போட்டியில் முதலாமிடம்



(இக்பால் அலி)

2012.11.10ம்  ஆண்டு முஸ்லிம் சமய காலாசாரத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இரத்தினபுரி மாவட்டம் றக்வான ஸலாம் முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை மிலாதுன் நபி விழா போட்டி நிகழ்வில் ஆரம்பப்பிரிவு 'அம்ம ஜுஸ்உ' வின் கிராஅத் போட்டியில் கண்டி அல்-ஹம்ரா வித்தியாலயம் தரம் ஐந்தில் கற்கும் மாணவன் எம். எஸ். அஸ்ஜத் அஹ்மத் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். 

இவர் அக்குறணை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி; எம். ஏ. எம். சியாம். (யூசுபி, பாழிலே தேவ்பந்த்) நஸ்லியா ஆகியோரின் புதல்வருமாவார் செல்வன் அஸ்ஜத் அஹ்மத் 2012 ஆண்டின் 5ம் வகுப்பு பலமைப்பரிசில் பரீட்சையில் 155 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.