Header Ads



எனது வழக்கை விசாரிக்காதீர்கள் - உயர் நீதிமன்றத்தில் றிசாத் மனு தாக்கல்


அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க வேண்டாம் என கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 மன்னார் நீதாவன் ஏ.யூட்சன் மீது அச்சுறுத்தல் விடுத்தமை, மன்னார் மாவட்ட நீதமன்றம் மீதான தாக்குதல் மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த ஆகிய குற்றச்சாடடுக்கள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மீது சுமத்தியே மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த வழக்கை  2013ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி விசாரிப்பதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த செப்டெம்பர் 5ஆம் திகதி தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது. (Tm)

No comments

Powered by Blogger.