மொஹமட் முர்சிக்கு ஏற்பட்டுள்ள சேதனை
எகிப்து ஜனாதிபதியாக சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது முர்சி பதவி வகித்து வருகிறார். இவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே தலைநகர் கெய்ரோவில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது கற்கள், பாட்டில்கள் மற்றும் பொட்ரோல் குண்டுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும் சாலைகளில் நிறுத்தியிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். 2 பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த மோதலில் 110 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை சுகாதார அமைச்சகம் உறுதி செய்தது. முர்சி பதவி ஏற்ற பிறகு தற்போது தான் முதல் முறையாக மோதல் நடந்துள்ளது.

Post a Comment