கையடக்க தொலைபேசிகளை சுத்தமாக வைத்திருங்கள் - இல்லையேல் காதில் பூச்சி வரும்..!
NF
காதில் தொடர்ச்சியான அரிப்போ அல்லது செவிப் புலன் குறைபாடோ இருந்தால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ ஆலோசனைக்கு பெற்றுக்கொள்ள பொரளை மருத்துவ பரிசோதனை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையர் ஒருவரின் காதில் இருந்து மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தாய்வான் பிரஜை ஒருவரின் காதலிருந்தும் மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதென நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வயோதிபர்கள் மற்றும் உடற்தூய்மை குறித்து அதிகம் கவனம் செலுத்தாதவர்களின் காதுகளில் மைற்றாக்கள் பரவுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர்ச்சியாக காதுகளில் உபாதை அல்லது செவிபுலன் குறைபாடுகள் இருந்தால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என பொரளை மருத்துவ பரிசோதனை நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இதன்போது மைற்றாக்கள் பரவியமைக்கான அறிகுறி கண்டறியப்பட்டால் தமது நிலையத்திற்கு தகவல் அனுப்பிவைக்கப்படும் என டொக்டர் அனில் சமரநாயக்க கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக சுமார் 200 கையடக்கத் தொலைபேசிகளிலும் மைற்றாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய தரத்துடன் சுத்தமாக கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்து வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment