பரீட்சைக்கு 7 நாட்களுக்கு முன் தனியார் வகுப்புகளுக்கு தடை - கல்வியமைச்சு அறிவிப்பு
(TN)
தேசிய மட்டப் பரீட்சைகள் நடைபெறும் திகதிக்கு ஏழு தினங்களுக்கு முன்னதாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், ரியூஷன் வகுப்புகள் நடத்துவது தடை செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிரதான பரீட்சைகள் நடைபெறும் திகதிக்கு ஏழு தினங்களுக்கு முன்னதாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், ரியூஷன் வகுப்புகள் நடத்துவது தடை செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சையிலிருந்து இந்த புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் நடைபெறும் தினத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னதாக பிரசார நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையைப் போன்றே பரீட்சை நடைபெறும் திகதியிலிருந்து ஏழு தினங்களுக்கு முன்னதாக சகல மேலதிக வகுப்புகள், ரியூஷன் வகுப்புகள், கருத்தரங்குகள் யாவும் நிறுத்தப்பட வேண்டும்.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிடும் என்றும் குறிப்பிட்டார். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை போன்றவை இப்புதிய நடைமுறைக்கு உள்வாங்கப்படுகிறது.
பரீட்சையொன்று நடைபெறுவதற்கு முதல் நாள் கூட சிலர் விசேட ரியூஷன் வகுப்புகள் நடத்துகின்றனர். பரீட்சைக்கு வரும் வினாக்கள் பற்றி எதிர்வு கூறுதல், வினாத்தாள்கள் வெளியாகி விட்டன. அவை பற்றி அறிந்து கொள்ள எங்களை அணுகுங்கள் என பலரும் பிரசாரம் செய்து மாணவர்களை திக்குமுக்காட வைகின்றனர். இல்லையேல் வினாத்தாள் வெளியாகிவிட்டது என்ற பொய்ப் பிரசாரத்தை செய்கின்றனர். வருடக்கணக்காக கல்வி கற்று பரீட்சைக்கு ஆயத்தமாகும் மாணவனை ஒரு சில தினங்களில் குழப்பி விடுகிறார்கள்.
மேலதிக வகுப்புகள், ரியூஷன் வகுப்புகள், கருத்தரங்குகள் எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து ஒரு வாரம் வீட்டிலிருந்து அமைதியான முறையில் பரீட்சைக்கு ஆயத்தமாவதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் நோக்கத்திலும் இப்புதிய நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்படுகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ReplyDeleteபரீட்சைகளை, தேர்தலுடன் ஒப்பிடுவது விவேகமற்ற ஒன்றாகும்.
எனினும், பரீட்சைக்கு, ஒரு சில தினங்களுக்கு முன்னர், 'பரீட்சையில் வரும் வினாக்களை வெளியிடுகின்றேன்' என்று கூறி எத்தனயோ ஆசிரியர்கள் (??) மாணவர்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கின்றனர். அவற்றை நம்பும் மாணவர்கள், பரீட்சை தினத்தன்று ஏமாற்றத்தினால் மனமுடைந்து, உரிய முறையில் விடை எழுதவும் முடியாத மன நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.
தனியார் வகுப்புகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப் பட வேண்டும்.
பாலியல் துஸ்பிரயோகங்கள் என்பது ஓரளவு பூதாகரமான விடயமாக இல்லாவிட்டாலும் கூட, பத்து நிமிடங்களுக்கு உட்காருவதற்கு பொருத்தமற்ற பாழடைந்த, சுகாதாரமற்ற, அசெளகரிகமான, அதிக வெப்பமுள்ள வேறு எதற்குமே தகுதியற்ற கட்டடங்கள் கூட தனியார் வகுப்புகளுக்காக பயன் படுத்தப் படுகின்றன. அங்கே இருக்கும் தளபாடங்களோ மிக மோசமான நிலையில் இருக்கும்.
இவை குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.