Header Ads



அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் 16 பேர் சித்தி


ஏ.எல் றியாஸ்        

அட்டாளைச்சேனை அந் - நூர் மகா வித்தியாலயத்தில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி கஸ்ஸாலி தெரிவித்தார். 

இம்முறை நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரிட்சையில் இப்பாடசாலை சார்பாக 51 மாணவர்கள் தோற்றி 16பேர் சித்தியடைந்துள்ளனர். இதன் மூலம் சென்ற வருடங்களை விட இவ்வருடம் கூடுதலான மாணவர்கள் சித்தியடைந்து இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் என அவர்மேலும் தெரிவித்தார்.

ஏ.ஜே பாத்திமா சீமா 172 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், ஐ.எம் அசாம் 171 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், ஏ.எஸ் சுஜானா 162 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பாடசாலை சார்பாக பெற்றுள்ளனர்.

எம்.கே. பாத்திமா அஸ்பா – 161 புள்ளிகளையும,;; எம். அகீல் - 160 புள்ளிகளையும், கே.ஏ உசாமா - 160 புள்ளிகளையும், என். மபாஸ் - 159 புள்ளிகளையும்,  எம்.எச்.எம் ஹம்ஸான் - 158 புள்ளிகளையும் எப்..எம். அப்றாஸ்; - 156 புள்ளிகளையும், ஏ.லூனாஸ்: - 153 புள்ளிகளையும், கே.சிமாஜ் - 152 புள்ளிகளையும், ஜே.எம் நுஸ்கி - 151 புள்ளிகளையும், ஏ.ஜே. பாத்திமா சஜான் - 150 புள்ளிகளையும், எஸ் சப்;னா - 149 புள்ளிகளையும், ஏ.என்.எம் நஜாத் , எப்.ஏ றிஸ்லின் ஆகியோர் - 147 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் ஆர் ஹாறுன், மற்றும் அதிபர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி ஆகியோருக்கு பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் அப்பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.