மதநிந்தனை குற்றச்சாட்டு - பாகிஸ்தான் சிறுமி விடுதலை
பாகிஸ்தானில் மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மூன்று வாரங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ சிறுமி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமான மதநிந்தனையில் ஈடுபட்டார் என்கிற குற்றச்சாட்டில் ரிம்ஷா என்ற பெண் கைதுசெய்யப்பட்டமை ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் பக்கங்களை எரித்தார் என்று அவர்மீது குற்றம் சுமத்திய ஒரு கும்பல் அவரை தண்டிக்கவேண்டும் என்று கோரியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்ள நேரும் நபருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் மத தீவிரவாத குழுக்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் மிகத் தீவிரமானவை என்பதால் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களில் முக்கிய கவனத்தை பிடித்தன.

Post a Comment