Header Ads



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 61 ஆவது ஆண்டு விழா

 
.எஸ்.எம்.இர்ஷாத்                                                                                                                                                         

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 61வது ஆண்டு விழா நாளை கேகாலையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கேகாலை நகர சபை முன்றலில் இது நடைபெறவுள்ளதாக கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.
 
அமைச்சர் டளஸ் அலகப்பெரும, மேல் மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யித் அலவி மௌலானா ஆகியோர்களும் இதில் சமூகமளித்திருந்தனர்
 
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 61 வது மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சகல கட்சிகளுக்கும் அமைச்சர் பகிரங்க அழைப்பு விடுத்ததுடன் இன, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து இனமக்களும் இதில் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
 

1 comment:

  1. முன்னோக்கி .....! அல்லது முன்ளோக்கி.....!

    ReplyDelete

Powered by Blogger.