Header Ads



புற்றுநோய் பாதித்த மாணவர் உதவி கோருகிறார் (விபரங்கள் இணைப்பு)

புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலயம் தரம் 3 இல் கல்வி பயிலும் றியாஸ்தீன் ஆகிப் அஹ்மட் என்ற மாணவன் கடந்த இரு மாதங்களாக என்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வைத்தியசாலையின் தலைமை வைத்தியரான திருமதி தயமந்தி பீரிஸ் ஆலோசனையின்படி இந்தியாவில் பெங்களுர் Global Hospital இல் சத்திர சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் முழங்கால் வரையான பகுதியை அகற்றும் நிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதற்கான செலவாக சுமார் ரூபா 330,000/- தேவைப்படுகிறது.

இல.144, மஸ்ஜித் வீதியில் வசிக்கும் R.ரியாஸ்தீன் என்ற கூலித் தொழிலாளியான இம்மாணவனின் தந்தைக்கு தங்களால் இயன்ற உதவி செய்து அம்மாணவனின் எதிர்கால வாழ்விற்கு உதவி செய்யுமாறுஎமது பாடசாலை சார்பாக தயவாய் வேண்டுகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அருள்பாளிப்பானாக.
 
H.அப்துல் ஜப்பார்
அதிபர்
புத்தளம் - மணல்குன்று முஸ்லிம் மகாவித்தியாலயம்
 
தொடர்புகளுக்கு :

அதிபர் : H.அப்துல் ஜப்பார்  -  0714411559  /  0757397397

மாணவனின் தந்தை : R.ரியாஸ்தீன்  - 0710157047
வங்கி : People’s Bank, Puttalam Branch, கணக்கு இல. 009200190018683

1 comment:

  1. he will receive all the fund today by Puttalam Association Qatar (PAQ)thru Puttalam Grand Mosque. Insha Allah

    ReplyDelete

Powered by Blogger.