Header Ads



தலைவலிக்கு தண்ணீர் குடிப்பதுதான் தீர்வு - ஆய்வில் தகவல்

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் சிலர் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் நிரந்தர தீர்வு கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர்.

இவற்றில் இருந்து விடுபட தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பதுதான் சிறந்த மருந்து என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள மாஸ்டிரிச்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் தலைவலி பிரச்சினையால் அவதிப்படும் 100 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு சில அறிவுரைகளை கூறினர். தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்கள் தங்களது மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும். நீண்ட நேரம் நன்றாக தூங்க வேண்டும். காபி குடிப்பதை பாதி அளவாக குறைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இவை அனைத்தையும்விட தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வழக்கமாக எடுத்துக் கொள்வதை விட 1 1/2 லிட்டர் தண்ணீரை கூடுதலாக குடிக்க வேண்டும். இதை 3 மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றனர்.

இவற்றை பின்பற்றிய நோயாளிகளுக்கு தலைவலி குணமாகியது. அதன் மூலம் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் குடிப்பதே சிறந்த மருந்து என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

No comments

Powered by Blogger.