Header Ads



30 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஈரானிய பெண்கள் இருவர் கைது

V

ரூபா 30 கோடி பெறுமதியான போதைப்பொருளைக் கடத்திய பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 8.10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டோகாவிலிருந்து வந்த 42,28 வயதுடைய ஈரானியப் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் முகச்சவரம் செய்யும் கிறீம் டியூபுகளிலும், தலைக்கு வைக்கும் ஜெல் டின்களிலுமே சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளனர்.

'மெத்ஹெம்பெட்டமைன்" என்ற போதைப்பொருளையே கடத்தி வந்தபோது கைப்பற்றப்பட்டுள்ளது. இப்போதைப்பொருள் பெரும்பாலும் கொழும்பு இரவு விடுதிகளில் பயன்படுத்தப்படுபவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.