Header Ads



இலங்கையின் சில பகுதிகளில் பனிக்கட்டி மழை


பண்டாரவளை நகரிலும் - மடுல்சீமை பிரதேசத்திலும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கடும் மழையை அடுத்து, பண்டாரவளை நகரில் இன்று பிற்பகல் 2.50 அளவில் பனிக்கட்டி மழை பெய்துள்ளதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

மடுல்சீமை பிரதேசத்தில் இன்று பிற்பகல் 4.10 அளவில் பனி மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மழைபெய்த சந்தர்ப்பத்தில் மடுல்சீமை பிரதேசத்தை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் வீடுகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது

No comments

Powered by Blogger.