Header Ads



காலியில் முஸ்லிம் கடைகள் மீது மனித மலம் பூச்சு, நாய் இரத்தம் தெளிப்பு

காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும், நாய்கள் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும் அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில்  முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இச்சம்பவங்களுக்கு சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள தேசப்பற்றாளர்கள் எனக்கூறிக்கொள்ளும் சிலரே இவ்வாறான பாதகச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கெதிராக காலியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இனவாதச் செயற்பாடுகளை முஸ்லிம் கவுன்சில் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

7 comments:

  1. எங்களின் அரசியல் வாதிகளுக்கு மீடியா வுக்கு முன் மட்டும் வீர வசனம் பேசுவார்கள் அப்புறம் அவர்கள் enne செய்யிரர்கள் எண்டு உண்மையிலே தெரியாது , தேர்தல் வந்தால் அவர்கள் - சேவை மன்னர்கள் ஆவார்கள்- தொழில் கொடுப்பார்கள் பைக் கொடுப்பார்கள் தையல் machine கொடுப்பார்கள் அதற்கு அப்புறம் வீர வசனம் மட்டுமே இதில் அணைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ஒற்றுமையே

    ReplyDelete
  2. எல்லா மத போதகர்களும் மக்களுக்கு நல்லதைத்தான் சொன்னார்கள்.ஆனால் இந்தியாவில் இந்துக் காவிகளும்,இலங்கையில் பௌத்த காவிகளும் ஏன் இந்த கொலை வெறியுடன் அலைகிறார்களோ .சும்மா இருந்து ஊர்க்காசில் வயிறு வழப்பவர்கள் திணவெடுத்து அப்பாவி மக்களைத் தூண்டி இன வெறியூட்டி பிரச்சனைகளை
    உருவாக்குகிறார்கள்.அரபு நாடுகளில் பிச்சையெடுத்து நாட்டை முன்னேற்ற முஸ்லீம்கள் வேணும்.ஆனால் இலங்கையில் முஸ்லீம்கள் வாழக்கூடாது.நல்ல கொள்கையடா இனவாத தேர அரசே!அரபுகளிடம் பிச்சைஎடுக்க
    துணை போகிறோம் என்ற குற்றயுணர்ச்சி கூட இல்லாத அமைச்சர்களும்,முதல்வர் கனவுகளுடனும் நம் தலைவர்கள்.
    தலைவர்களே!பாதுகாப்புடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா,(இந்தியாவில் மோடியின் வெறியாட்டத்தில்காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் முஸ்லீம் எம்பியே உயிரோடு கொளுத்தப்பட்டார்.அப்போதைய ஜனாதிபதி கூட மோடியின் வெறியாட்டத்தை கண்டித்து அறிக்கை விடாத பிராமண அபுல் கலாம்.யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தது கூட தெரியாத அணு விஞ்ஞானி).
    நல்லூரில் தமிழ் இனவாதிகள் கிணற்றுக்குள் பன்றியை வெட்டிப் போட்டு முஸ்லீம்களை வெளியேற்றியது போல்
    காலியிலும் காவிகள் ஆட்டம் போடுகிறார்கள்.1914 கலவரத்தில்முஸ்லீம்களுக்கு எதிராக சிங்களவர்களுக்கு ஆதரவாக சேர்.பொன் .ராமநாதன் வழக்காடிவென்றுவந்த போது தோளில் சுமந்து வரவேற்றார்கள்.பின் தமிழர்கள் ? அதே போல் நாம் செய்த உதவிகளை மறந்து நமையும் கருவறுக்க முனைகிறார்கள்.
    இயக்க வெறி கொண்டலைந்தது போதும் ஒற்றுமையுடன் இன,மத வெறியர்களை அகிம்சை வழியில் வெற்றி கொள்வோம் வாருங்கள் இலங்கை முஸ்லீம் உம்மாவே!
    meraan

    ReplyDelete
  3. நாய் இரத்தம், மனித மலங்களை கழுவி விட்டு, வியாபாரத்தை கவனிப்போம். வேறு வழியில்லை.

    ReplyDelete
  4. சும்மா கதய வளக்காம.. தல நிமிர்ந்து வாழ பழகுங்க... ஒங்களுக்கு TOILET போகாட்டியும் அரசியல்வாதிதான் பழி! ஓய் அவன் பூட்டுல பூசினா நீங்க அவன்ட தலயில பூசுங்க!!! மடயன்!

    ReplyDelete
  5. திருப்பி அவன் தலையில பூசுவதற்கு நமக்கு திராணி இல்லை.

    நமக்குப் பூசியதை, கழுவி விட்டு வியாபாரத்தைக் கவனிப்பது மிகவும் நல்லது.

    இன்னோர் சமூகத்திற்கு 30 வருடமாக நடந்ததைக் கண்ணாரக் கண்ட அனுபவம் இருக்கிறபடியால் சிங்களவர்களுக்கு ஏற்றதுபோல், நாமும் வாழப் பழகுவதுதான் ஏற்றது.

    ReplyDelete
  6. ஆரம்பித்து விட்டர்ஹல் இனி இது தொடரும். இனிமேலும் நாம் உறங்கிக்கொண்டு இருந்தால் நம் வீட்டு கதவெய் தட்டி நம்ம சகோதரிகலே இழுத்து கொண்டு செல்லும் வாரெய் நாம் பதுகொண்டு இருப்பதா நிங்களே முடிவு செய்யுங்கள்........

    ReplyDelete
  7. meendum oru muslikalukku ethirana kalavara muyatsi u n vidaththitku nanriya muslimkal kavanam musaliuran

    ReplyDelete

Powered by Blogger.