Header Ads



காத்தான்குடியின் மிகப்பெரும் பள்ளிவாசல் - ஆசியாவிலேயே பெரிய ''டோம்''

KWC

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் அமைப்பதற்கான உடன்படிக்கை இன்று புதன்கிழமை பிரதமர் மாளிகையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகளும், பள்ளிவாயல் நிருவாகத்தினரும் கலந்து கொண்டனர்.

புத்தசாசன அமைச்சின் செயலாளர் கேஸியன் ஹேரத், மகாவலி அமைச்சின்  தலைவர் நிஹால் ரூபசிங்க அவர்களும் திறைசேறி பணிப்பாளர் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். ஆரம்பகட்ட வேலைக்காக ரூபா 8 கோடியே 70 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்நிதியினை 18 மாதத்திற்குள் செலவுசெய்யப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர். கோ நிறவனத்தின் இஸ்லாமிய கட்டிட கலைஞ்சர் இஸ்மாயில் அவர்களின் முழுமையான வடிவமைப்பில் மூன்று மாடிகளைக் கொண்ட பைதுல் முகத்தஸ் கட்டிட அமைப்பில் நிறுவப்படவுள்ள இப்பள்ளிவாயல் ஆசியாவிலேயே எங்குமில்லாத மிகப்பெரிய 65அடி அகலத்தினைக் கொண்ட டோம்மைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.

சுமார் ஐயாயிரம் பேர்களை ஓரே நேரத்தில் தொழுகைக்காக உள்ளடக்கக்கூடிய  வகையில் இப்பள்ளிவாயல் அமையப்பெருவதோடு இஸ்லாமிய தஹ்வாபணி மற்றும் ஹிப்ழு குர்ஆன் மதரஸா, இஸ்லாமிய நூலகம் என்பனவும் அமையப்பெறவுள்ளது.
இதற்காக வெளிநாட்டு உதவிகளும் பெறபடவுள்ளதாகவும் இதனை புரணப்படுத்துவதற்கு 200மில்லியன் எதிர்பார்ப்பதாகவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.




 

12 comments:

  1. I hope this is some kind of Government trap and they want show out to the international media that we are not against Muslim and Muslims living peacefully. but almighty Allah knows what behind of this.

    ReplyDelete
  2. asiavile periya pallina (kaibava) vida peritava katta poraram hisbullah.......... idila comedy kemadi onnum illaye.....

    ReplyDelete
  3. போட்டோவில் நிக்கும் ஆளுகளைப் பார்த்தால் கத்தம் பாத்திகா கூட்டம் மாதிரி தெரியுதே.பள்ளி பெரிதா கட்டி பிரயோசனம் இல்லைங்கோ மனிசருடையை மனசு பெரிசா இருக்கணும் .ஆடம்பரமான அலங்காரமான பள்ளிகள்
    கட்டுவது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று.முஸ்லீம்களின் பள்ளி கட்டுவதற்கு காபிர்களின் கையெழுத்து
    தேவையாக இருக்கிறது.எல்லாம் முதலமைச்சர் பதவி கூத்துங்கோ .
    யாழ் குருவி

    ReplyDelete
  4. எப்படி தட்டினால் காத்தான்குடி மக்களின் உள்ளங்களை திறக்கலாம்,மாற்றலாம் என்று சகோ ஹிஸ்இற்கு நன்றாக தெரியும் எலக்சன் வரபோதில்ல அதா தன்னோடுதான் காத்தான்குடி மக்கள் இருக்காங்கேன்னு அவருடைய பாஸ் மார்களுக்கு காட்டுவதற்காக கிளம்பிட்டாரு.
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் பல்கி பெருகி கொண்டே செல்வார்கள்.
    எஸ்.எம்.கையூம்,
    பொத்துவில்.

    ReplyDelete
  5. everything happens for a reason

    ReplyDelete
  6. karuthu sollunga but inthalavu porama padathinga, bcz u r muslimz don't forget it

    mafa
    kattankudy

    ReplyDelete
  7. Pullayayum noondittu thottilayum aatum arasaangam....

    ReplyDelete
  8. மாஷா அல்லாஹ்! பள்ளிவாசளினுள்ளே
    ஜனாதிபதியின் போட்டோ தொங்கவிடப்படாமல் இருந்தால் சரி.
    பித் அத்துக்களை ஒழித்து தூய இஸ்லாத்தைப்
    போதிக்க வேண்டும் இந்தப் பள்ளியிலாவது....

    ReplyDelete
  9. ithallam electionukku katra padamari vilanguthu,,

    ReplyDelete
  10. End of the day there is mosque to pray......

    Accept it positively...

    If someone try to distroy a mosque, all at once reating against to that.

    But, someone help to build mousque; you dispute each other....

    now you know where our ummath is stand....

    it is sign of curse.....

    ReplyDelete
  11. You can make as many as masjid you need and make these poor Muslim happy but voiceless. We don't want proud by buildings show how you are respecting us. Prove your quality in catering Muslims for them to entertain their religious rights. Give Muslim reasonable space in social economic. You can make foolish People from kattankudy. All Muslim politicians ( political businessman) will have to face Almighty allah.

    ReplyDelete
  12. Many commenters are half boile YAM

    ReplyDelete

Powered by Blogger.