சவூதி அரேபிய இளவரசரின் ஜனாஸா நல்லடக்கத்தில் இலங்கை பிரதிநிதியாக அமைச்சர் பௌஸி
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் நயீவ் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்தின் ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக பங்குகொள்ளவுள்ளார்.
இந்த தகவலை சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் யாழ் முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
தனது 78 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் நயீவ் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் காலமானாதாக சவூதி அரசாங்க தொலைக்காட்சி முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Fousikku intha velai maddum thaan mudyum.
ReplyDeleteIvarkal nallathum seythirukkalaam Allahthaan elloorin mannippukkum pathil solpavan Allah yerhanhuhu