வபாத்தானதாக கருதப்பட்டவர் உயிருடன் எழுந்தார் - எகிப்தில் சம்பவம்
இறந்து விட்டதாக கருதி கல்லறையில் புதைக்க இருந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் இறுதி சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.
எகிப்து நாட்டின் லக்சர் பகுதியை சேர்ந்தவர் அல் நுப்தி, 28. இவருக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையானார். பல மணி நேரம் கழித்தும் இவர் எழுந்திருக்காததால், இவர் இறந்து விட்டதாக கருதி உறவினர்கள் அனைவரும் இவரை கல்லறைக்கு எடுத்து சென்றனர்.
முன்னதாக, இவரது உடலை குளிப்பாட்டி இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக டாக்டரை அழைத்து வந்தனர். இறப்பு சான்றிதழ் கொடுக்க வந்த பெண் டாக்டர், அல் நுப்தியின் உடலை தொட்டு பார்த்த போது, அவரது உடல் கதகதப்புடன் இருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத்தில், அல் நுப்தி உயிருடன் எழுந்தார். துக்கத்தில் மூழ்கியிருந்த உறவினர்கள், அல் நுப்தி உயிரோடு எழுந்தது குறித்து மகிழ்ந்து, இறுதி சடங்கை விழாவாக மாற்றி கொண்டாடினர்.

எகிப்து நாட்டின் தென் மாகாணத்தின் நகா அல் சிம்மன் நகரில் உணவு விடுதி ஒன்றன் பணியாளராக கடமையாற்றி வந்த ஹம்தி ஹபீஸ் அல் நுபி என்ற 28 வயது முஸ்லிம் இளைஞர்
ReplyDeleteதொடர்பாகவே மேற்படி செய்தி வெளியாகியுள்ளது.
மொழிபெயர்ப்பில் ஒரு தவறு, அதாவது, அவர் புதைக்கப்பட இருந்தது கல்லறை அல்ல, மண்ணறை ஆகும்.