யாழ்ப்பாணத்தில் சிங்கப்பூர் அமைச்சர் (படங்கள்)
யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் தேவைகள் தொடர்பிலும் மாவட்டச் சிறார்களின் கல்வி மேம்பாடு தொடர்பிலும் எதிர்காலத்தில் சிங்கப்பூர் அரசு கவனம் செலுத்தும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (31) விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பொதுநூலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. இங்குள்ள மக்களது வாழ்வு முன்னேற்றம் காண்பதற்கு எல்லோரது ஒன்றிணைந்த உழைப்பு முக்கியமானது.
இதனிடையே நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வு தற்போது பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இருந்த போதிலும் இங்குள்ள சிறார்களது கல்வி மேம்பாடு மற்றும் இந்நூலகத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான தேவைகள் தொடர்பில் சிங்கப்பூர் அரசு நிச்சயம் முழுமையான ஒத்துழைப்பு ஒத்தாசையும் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் வெளிவிவாகர அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நூலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் தேவைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (31) விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பொதுநூலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. இங்குள்ள மக்களது வாழ்வு முன்னேற்றம் காண்பதற்கு எல்லோரது ஒன்றிணைந்த உழைப்பு முக்கியமானது.
இதனிடையே நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வு தற்போது பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இருந்த போதிலும் இங்குள்ள சிறார்களது கல்வி மேம்பாடு மற்றும் இந்நூலகத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான தேவைகள் தொடர்பில் சிங்கப்பூர் அரசு நிச்சயம் முழுமையான ஒத்துழைப்பு ஒத்தாசையும் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் வெளிவிவாகர அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நூலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் தேவைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.







Post a Comment