Header Ads



தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் குறித்து கவிஞர் ஜெயபாலன்..!

உலகமயமாதல் பின்னணியில் உலகளாவிய ஆதரவை திரட்டுவது மட்டுமே இலங்கை முஸ்லிம்களுக்கு பலமாக அமையுமென கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீமுடைய நகர்வுகள் குறித்து கவிஞரும், நடிகருமான ஜெயபாலன், தனது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தம்புள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற சிங்கள பெள்த்தர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று முஸ்லிம் மக்களின் குரல் வலுவடைந்து உலக ஆதரவையும் பெற்று வருகிறது. உலகமயமாதல் பின்னணியில் உலகளாவிய ஆதரவை திரட்டுவது மட்டுமே பலமாகும். இந்த முயற்ச்சியில் தங்கள் உழைப்பு வெற்றிபெற பிரார்திக்கிறேன் எனவும் கவிஞர் ஜெயபாலன் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைத்துள்ள சிறு குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. எமது நன்றிகள் உரித்தாகட்டும்

    ReplyDelete
  2. ஜெயபாலன் அவர்களே, உங்கள் எழுத்துக்கு முஸ்லிம்கள் சார்பில் எங்கள் நன்றிகள் .
    அன்புடன்.
    Daoud Tharik

    ReplyDelete
  3. Thanks a lot for your concern.

    ReplyDelete

Powered by Blogger.