Header Ads



கவுதமாலாவில் 201 விவசாயிகளை கொன்றவனுக்கு 6060 வருடங்கள் சிறைத் தண்டனை

கவுதமாலாவில் 1982ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரில் 201 விவசாயிகளை கொலை செய்த சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிக்கு 6060 ஆண்டு சிறை தண்டனை விதித்து கவுதமாலா கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

2 நாட்களில் 201 பேரை கொலை செய்த பிட்ரோ பிமென்டெல் என்ற அதிகாரிக்கு இறந்துபோன விவசாயிகள் ஒருவருக்கு 30 ஆண்டு வீதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கோர்ட் அறிவித்துள்ளது. மேலும் மனித இனத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதால் கூடுதலாக 30 ஆண்டுகளும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

54 வயதாகும் இவர் கவுதமாலாவின் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனை இதுவே ஆகும்.



2 comments:

  1. இரண்டு நாட்களில் 201 பேரை கொன்றது என்பது,
    குறுகிய காலத்தில் பலபேரை கொன்ற மனித குலத்துக்கு
    எதிரான குற்றம் என்பதால், நான் இவருக்கு
    ஒரு நாளுக்கு 1956 வருடம் வீதம் இரண்டு நாட்களுக்குமாக
    3912 வருட சிறைத்தண்டனையும், போனஸாக மேலும் 177
    ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்குகின்றேன்.

    இதன்படி இவரது மொத்த சிறைத்தண்டனை 10089 ஆண்டுகள் ஆகும்.
    இவருக்கு குளிரூட்டப் பட்ட சிறை அறை, LED தொலைக்காட்ச்சி, லப்டொப்,
    ஹை ஸ்பீட் பரோட் பான்ட் கனக்ஸன், ஐ போன், ஐ பாட் என்பன வழங்கப்பட
    வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

    12101 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இவர் எவ்வித நிபந்தனைகளுமின்றி
    விடுதலை செய்யப் பட வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கின்றேன்.
    அன்றிலிருந்து 12 வருடங்களுக்கு இவர் அருகில் உள்ள போலிஸ் நிலையத்தில்
    ஒவ்வொரு சனிக்கிழமையும் சமூகமளித்துக் கையெழுத்திட வேண்டும்
    என்றும் தீர்ப்பளிக்கின்றேன்.

    இப்படிக்கு
    அதி நீதியரசர்
    லூஸ் மெண்டல்.

    (இதெல்லாம் ஒரு அறிவாளி/ படித்தவன் கொடுக்கும் தீர்ப்பா?)

    ReplyDelete
  2. Blue ray DVD playes is missing.

    ReplyDelete

Powered by Blogger.