Header Ads



கடாபி நரகத்தில் இருப்பார் - அமெரிக்க குடியரசு கட்சித் தலைவர் கண்டுபிடித்தார்

நேற்று முன்தினம் மரணித்த வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல்லிற்கு நரகம்தான் என அமெரிக்க குடியரசு கட்சியின் தலைவர் மெக்கெய்ன் சாபமிட்டுள்ளார்.

இதுக்குறித்து மெக்கெய்ன் கூறுகையில்,’கிம் ஜோங் இல், ஜோஸஃப் ஸ்டாலின், கர்னல் கத்தாஃபி ஆகியோருடன் இனி நரகத்தில் இருப்பார். கிம் இறந்ததன் மூலம் உலகம் மேலும் நல்லதொரு இடமாக மாறி உள்ளது’ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிடம் தோல்வியை தழுவிய மெக்கென் தெரிவித்துள்ளார்.

கிம்மின் மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து எதுவும் தெரிவிக்காத சூழலில் அமெரிக்காவின் பிரபல தலைவர்கள் கிம் குறித்து மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மக்களை பட்டினி போட்ட அடக்குமுறையாளர் என குடியரசு கட்சியில் இன்னொரு பிரபல தலைவரான மிட் ரோம்னி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.