Header Ads



மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துவது பற்றி ஆராய 6 குழுக்கள் நியமனம்


இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை எவ்வாறு முன் எடுப்பது என்பது தொடர்பாக அறிக்கை சமர்பிக்க 6 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மற்றும் மீளக்குடியேறிய முஸ்லிம்களின் நலன்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோரின் ஆலோசனையில் அடிப்படையில் நடைபெற்றுள்ள இக்கூட்டத்தில் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.