Header Ads



பிரிட்டனில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடல்


பிரிட்டனில் வருடாந்தம் நடைபெரும் யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இவ்வருடமும் 6 ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்ட்காம் டவுன் ஹாலில் மதியம் 12 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
பிரிட்டனில் வாழும் யாழ்பாண புலம் பெயர் முஸ்லிம்கள் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள வடமாகாண முஸ்லிம்களுக்கு முடியுமான உதவிகளை செய்யும் நோக்கோடு அமைக்கப்பட்ட ஒரு அமைப்பே (JMA) ஆகும்.

இந்த அமைப்பு பல ஆண்டுகலாக பல உதவிகளையும் சேவைகளையும் செய்து வருகிறது வருடாவருடம்  பிரிட்டனில் வாழும் மக்களையும் ஒன்று கூட்டி தனது ஒன்று கூடலையும் நடத்திவருகிறது.

அதன் மூலமாக எமது சமூக மக்களிடையே நவீன அறிவியல் வளர்ச்சியையும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்வதோடு, உலகம் முழுவதும் பரந்து வாழும் யாழ் முஸ்லிம்களுக்கிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி ஒரே சமூகம் என்ற தரத்திலே சமூகரீதியிலான சகல செயட்பாடுகளையும் செய்து வருகிறது தற்பொழுது ஐக்கிய இராஜியத்தில் அரசாங்க அதிகாரபூர்வமான அமைப்பாக அங்கிகரிக்கப்பட்டு தொடர்ந்தும் தமது சேவைகளை ஆக்கபூர்வமாக செய்து வருகிறது.

இவ்வருடம் நடை பெறவுள்ள ஒன்று கூடலில் (JMA) இதுவரை செய்த சேவைகளைப்பற்றியும் எதிர்காலத்தில் செயல்படவுள்ள சேவைகள் பற்றியும். இன்னும் பல விடயங்கள் பற்றியும் கலந்துரையடப்படவுள்ளது அத்தோடு சிறுவர்களுக்கான குர் ஆன் ஓதல் போட்டி  மனனப்போட்டி மற்றும் பொது அறிவுப் போட்டி என்பனவும் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.