Header Ads



பிரிட்டனில் இலங்கையர்களின் கொலைக்கு காரணமான பெண் கைது

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள டெம்பேட் என்கிற இடத்தில் அமைந்திருக்கும் 16 மாடிக் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கைத் தமிழ் பெண்கள் இருவர் உயிர் இழந்தமை தொடர்பான வழக்கில் அம்மாடிக் கட்டிடவாசிகளில் ஒருவரான Sandra Clarke (வயது-49) என்பவர் Camberwell Green நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இவருக்கு எதிராக கடந்த 06 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மனிதக் கொலைகளை புரிந்தார், உயிராபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக தீ மூட்டினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இறந்தவர்களின் சடலங்கள் நேற்று பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இச்சடலங்கள் உத்தியோகபூர்வமான முறையில் அடையாளம் காணப்பட்டன.

குணாளினி அழகரத்தினம் (வயது-42), சந்திராவதி தர்மலிங்கம் (வயது-59) ஆகியோரே இறந்தவர்கள் என்று பொலிஸார் அறிவித்து உள்ளனர்.
உறவினர்களை பார்க்க இவர்கள் பிரித்தானியாவுக்கு வந்திருந்தார்கள்.

No comments

Powered by Blogger.