Header Ads



பொன்சேகாவை விடுவிக்ககோரி ஆர்ப்பாட்டம்

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா அடைத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் வெளியே ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆர்வலர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

பொன்சேகா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர். ஊழல் குற்றம் உறுதிசெய்யப்பட்டு இரண்டரை வருட கால சிறைத் தண்டனையை சரத் பொன்சேகா அனுபவித்து வருகிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டதற்காகப் பழிவாங்குவதற்காகத்தான் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறையில் அடைத்துள்ளார் என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஒரு வருடத்துக்கு முன்பு பொன்சேகா கைது செய்யப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.