உயிரை காப்பாற்றிய பேஸ்புக்
பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்தால் சுதந்திரம் இராது என்கிற எண்ணத்தில் இத்தாலிய யுவதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை தற்கொலை முயற்சியில் இறங்கி இருந்தார்.
இவர் தொழிலை இழந்து இருந்தார். இதனால் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல வேண்டி இருந்தது.
இதை இவர் விரும்பவில்லை. ஆனால் தற்கொலையில் ஈடுபடுகின்றமைக்கு முன்னர் சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக்கில் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து இருந்தார்.
இவரின் நண்பர் ஒருவர் பொலிஸுக்கு முறைப்பாடு செய்தார். பொலிஸார் இவரின் வீட்டைச் சென்றடையும் வரை இவருடன் நண்பர் தொலைபேசியில் கதைத்துக் கொண்டு இருந்தார். வீட்டைச் சென்றடைந்த பொலிஸார் இவரைக் காப்பாற்றினர்.
Post a Comment