Header Ads



தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


இலங்கையில் இன்று (11) தங்க விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


சங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்துள்ளது.


இதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.


அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


சர்வதேச தங்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட காரணிகள் உள்நாட்டு தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.


இதனிடையே, தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்றைய விலை வீழ்ச்சி ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளதாகவும் நகை வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.