மல்வானை காணி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கையகப்படுத்தப்படும்
இன்றைய நாட்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மல்வானை காணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கையகப்படுத்தப்படும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவப் பிரதிநிதிகளுடன் இன்று (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் குரலுக்குச் செவிசாய்த்தமைக்கும், அரசாங்கம் என்ற ரீதியில் மாணவர் நலன்புரிப் பிரச்சினைகளில் தலையிட்டமைக்குமான பலன்களாகும். மல்வானை காணியையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கையகப்படுத்தி, சாத்தியக்கூறு ஆய்வு ஒன்றை நடத்திய பின்னர், அதனைப் பொருத்தமானதொரு உயர்கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்க நாம் நடவடிக்கை எடுப்போம்." என்றார்

Post a Comment