Header Ads



அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் விபத்து

 


மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை வேன் ஒன்று கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீதே குறித்த வேன் மோதியுள்ளது.


குறித்த வேனில் பயணித்த குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் மாத்தறை முலட்டியன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 


காயமடைந்த அனைவரும் '1990 சுவசெரிய' அம்பியூலன்ஸ் ஊடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்பட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.