Header Ads



அரச பெரிய புள்ளிகள் நாட்டை சவப்பெட்டிக்குள் அடைப்பு, நாட்டில் ஏதாவது மிச்சம் இருந்தால் அதனையும் விற்பதற்கு 7 மூளையாளி நடவடிக்கை


அரசாங்கத்திலுள்ள பெரிய புள்ளிகள் அனைவரும் இணைந்து நாட்டை சவப்பெட்டிக்குள் அடைத்துள்ளதாகவும் தற்போது அவர்கள் சவப்பெட்டிக்கான கடைசி ஆணிகளை அடித்து வருவதாகவும், கப்ரால் நாட்டையும் பொருளாதாரத்தையும் மயானத்தை நோக்கி கொண்டு செல்ல வழி செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் ஏதாவது மிச்ச மிகுதி இருந்தால் அதனையும் விற்பதற்கு ஏழு மூளையாளி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஆச்சிரியமும் சுபீட்சமும் நிரம்பி தள்ளுயுள்ளது.அடுப்புக்கான விறகு சுப்பர் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கின்றன.திரவ உர கொள்கலன்கள் வெடிக்கின்றன. சுற்றுநிரூபங்கள் மீளப்பெறப்படுகின்றன.இரவு பகல் பாராது பணம் அச்சிடப்படுகின்றது.நாட்டை கட்டியெழுப்புவதில் தோற்றுப்போன அரசாங்கம் நாட்டை தோல்வி அடைய செய்வதில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் திஸ்ஸமஹராமயில் இடம்பெற்ற மக்கள் குறைகளை கேட்டறியும் “மனிதாபிமான சுற்றுலாவில்” கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது எதிர்க்கட்சி தலைவர் பொதுமக்கள்,வர்த்தகர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் 'குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு ' என்று துண்டு பிரசுரத்தையும் மக்களுக்கு வழங்கினார்.

No comments

Powered by Blogger.