Header Ads



தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி குழந்தை மரணம்


- க. அகரன் -

வவுனியா அண்ணாநகர் பகுதியில் தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது.

குறித்த குழந்தை தொட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக  கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

ஆயினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் குழந்தை உயிரிழந்தது.

சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்குவயது குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.