ரயில் மோதி குடும்பஸ்தர் வபாத்
- ஹஸ்பர் ஏ ஹலீம் -
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிப்பொத்தானையை சேர்ந்த 21 வயதுடைய இளம் குடும்பஸ்தரான ஹமீட் முபீட் என்பவரே, நேற்று (07) மாலை கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த ரயில் மோதி பலியாகியுள்ளார்.
குடும்பஸ்தரின் சடலம், கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment