Header Ads



நௌபர் மௌலவி உட்பட 25 பேருக்கு எதிராக ஜனவரி 12 ஆம் திகதி விசாரணை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 25 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் குறித்த வழக்கை ஜனவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மூவரடங்கிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு இன்று (23) தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது பிரதிவாதிகள் மிகுந்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.