அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பை தடுப்பதற்காகவே பொருட்களை பதுக்குகின்றனர் - வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சதொசவிற்பனை நிலையங்களின் ஊடாக மக்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பில் கண்டறிவதற்கான களவிஜயம் மேற்கொண்டிருந்த போதே ஊடகங்களுக்கு இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
மக்களின் நலனை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் தலையீட்டினால் covid -19 தாக்கத்தின் இக்கட்டான சூழ்நிலையிலும் அனைத்து சதொச விற்பனை நிலையங்களும் திறக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பதுக்கி வைத்திருக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவை மக்களுக்கு நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட இரண்டுக்கும் மேற்பட்ட சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. அவை இன்றும் திறந்த நிலையில் இருந்திருந்தால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு மிக இலகுவாக இருக்கும். எனினும் தற்போது எனது வேண்டுகோளின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சதொச விற்பனை நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உற்பத்தியாளர்களின் பொருட்களை சதொச விற்பனை நிலையங்களுக்கு பெற்றுக்கொள்வது தொடர்பிலும் பல முன்மொழிவுகளை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் முன் வைத்துள்ளேன் என தெரிவித்தார்.
இந்த கடைக்குப்போற பரதேசி நாய்ங்க தொல்ல தாங்க முடியல்ல.
ReplyDeleteஇந்த கடைக்குப்போற பரதேசி நாய்ங்க தொல்ல தாங்க முடியல்ல.
ReplyDelete