Header Ads



திரிபுபடுத்தும் போக்கிலிருந்தும், இரட்டை நிலைப்பாட்டிலிருந்தும் ஜம்இய்யத்துல் உலமா விலக வேண்டும் - BBS


ஒரு விடயத்தை பிறிதொரு விடயமாகத் திரிபுபடுத்தும் போக்கிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விலகிக்கொள்ளவேண்டும்.

நாம் அல்குர்-ஆனில் உள்ள ஏதேனுமொரு விடயத்தைக்கூறினால், அது மக்காவிலோ அல்லது மதினாவிலோ அருளப்பட்டது என்றுகூறி அதிலிருந்து விடுபட்டுக்கொள்கின்றீர்கள்.

ஆனால் உங்களுக்கென ஏதேனுமொரு மதரீதியான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அதனைப் பயன்படுத்துகின்றீர்கள்.

ஆகையினால் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டிலிருந்து விலகி, உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுங்கள் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பொதுபலசேனா அமைப்பு கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அர்கம் நுராமித்தினால் கையெழுத்திடப்பட்டு கடந்த 22 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த கடிதத்திற்கு இன்று  வெள்ளிக்கிழமை பொதுபல சேனா அமைப்பின் ஊடகப்பிரிவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

'ஒரு விடயத்தை பிறிதொரு விடயமாகத் திரிபுபடுத்தும் போக்கிலிருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விலகிக்கொள்ளவேண்டும்.

இனியும் உங்களால் மக்களை ஏமாற்றமுடியாது. நாம் அல்குர்-ஆனில் உள்ள ஏதேனுமொரு விடயத்தைக்கூறினால், அது மக்காவிலோ அல்லது மதினாவிலோ அருளப்பட்டது என்றுகூறி அதிலிருந்து விடுபட்டுக்கொள்கின்றீர்கள்.

ஆனால் உங்களுக்கென ஏதேனுமொரு மதரீதியான உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அதனைப் பயன்படுத்துகின்றீர்கள். 

ஆகையினால் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டிலிருந்து விலகி, உறுதியானதொரு நிலைப்பாட்டை எடுங்கள்' என்றும் பொதுபலசேனா அமைப்பு அக்கடிதத்தின் ஊடாகக் கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

(நா.தனுஜா)  வீரகேசரி

3 comments:

  1. இது ஜம்இய்யதுல் உலமாவினை ஒழித்துக் கட்டும் ஆட்சியாளர்களின் நீண்ட செயல்திட்டத்தின் ஒரு கட்டமாகும். இந்த சைத்தானுக்கு பதில் அளிப்பதை விட்டு அதனை எவ்வாறு அணுகவேண்டும் என்பதை மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு செயற்பட வேண்டும்.

    ReplyDelete
  2. இந்த நாய்களுக்கு பதிலாக வேண்டிய தேவையே இல்லை

    ReplyDelete
  3. உலமா சபை மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களுக்கு ஒரு வேண்டுகோள்.பொது பல சேனா அல்லது வேறு எந்த அமைப்புகளுடனும் நீங்கள் விவாதிக்க போகவேண்டாம்.
    அவர்களோடு எந்த தொடர்பும் நமக்கு வேண்டாம்.
    அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.