Header Ads



சுற்றுலாப் பயணிகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஊரடங்கு பொருந்தாது - அமைச்சர் பிரசன்ன


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர்கள், சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இயங்க அனுமதிக்கப்படுவர் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (24) தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில், பொருளாதாரத்தை உயர்த்தவும், நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் அரசாங்கம் விரும்புவதாகவும், அதன்படி அந்தந்த துறைகளுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவுடன் அமைச்சில் இன்று (24) காலை  நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. போதை மயக்கத்தில் வௌியிடப்படும் இத்தகைய கருத்துக்களை வாசகர்கள் மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உக்கிரேன்,ரஷ்ய விபச்சாரிகளையும், இந்தியர்களையும் இலங்கைக்குக் கொண்டுவந்து கொரோனாவைப் பரப்பிய பாவத்தில் இவருக்கும் பங்கு இருப்பது போல் தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.