உலகில் முதல் முறையாக 3 டெல்டா பிறழ்வுகளையுடையவர்கள் கொழும்பில் அடையாளம்
நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா பிறழ்வின் மரபணு மாற்றம் அடைந்த மூன்று வகை டெல்டா பிறழ்வுகளுடன் கூடிய தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
உலகில் டெல்டாவின்,மூன்று பிறழ்வுகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்புசக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான பிரிவு வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
இவற்றில் ஒரு பிறழ்வு இதுவரை இலங்கையில் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டும் வெளிநாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் மரபணு மாற்றம் அடைந்த மூன்று டெல்டா பிறழ்வுகளுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார்.
Post a Comment