Header Ads



பங்களாதேஷிடமிருந்து 150, IMF இடமிருந்து 780, சீனாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களும் இலங்கைக்கு கடனாக கிடைக்கிறது


பங்களாதேஷிடமிருந்தும் 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் மத்திய வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கிக்கு இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல் வசதியின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியினூடாக இலங்கையில் அந்நிய செலாவணியின் அளவு அதிகரித்துள்ளதாக எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சீன அபிவிருத்தி வங்கியினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை இன்று (31) நாட்டுக்கு கிடைக்கவுள்ளது.

10 வருடங்களில் மீள செலுத்தக்கூடிய வகையில், சலுகைக் கடன் நிபந்தனையின் கீழ் இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.