Header Ads



"மாடறுப்பை தடைசெய்ய, முஸ்லிம் Mp பிக்கள் உதவ வேண்டும்"


அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி  அரசாங்கத்தை நோகாமல் பார்த்துக்கொண்ட 20க்கு கையுயர்த்திய அனைத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்   எம்.பிக்களும்  இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தையும் அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று நிறைவேற்றிக் கொடுத்திட வேண்டும என கிழக்கு மாகாண சபையின்முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம் கிண்டல் செய்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாடு அறுப்பை தடைசெய்ய அரசிற்கு உதவுங்கள் தவறினால்  இவ் எம்.பிக்களுக்கு மௌத்தானாலும் கடனாக விடும், 

மாடு அறுப்பை தடைசெய்யும் சட்டமூலத்திற்கு  சட்டமா அதிபர்   அனுமதி. அளித்துள்ளார்

அடுத்த அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது.

நன்றி ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்‌ஷ

நன்றி பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ

நன்றி  நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ

ஜனாஸாக்கள் எரிப்பு 

வெள்ளவத்தையில் 15,000 குர்ஆன் பிரதிகளை கைப்பற்றல்

புர்காவை தடைசெய்தல்

முஸ்லிம் அரசியல்வாதிகளை கைதுசெய்தல்

முஸ்லிம் சட்ட / மார்க்க புலமையாளர்களை கைதுசெய்தல்

தீவிரவாதத்தோடு சம்மந்தப்படாத இஸ்லாமிய அமைப்புக்களையும் தடைசெய்தல்

இஸ்லாமிய நூல்களை கொண்டு வருவதை தடைசெய்தல்

 எல்லை நிர்ணயக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை உள்வாங்காமை

 விவாக விவாகரத்து சட்டத்தை அழிக்கும் அமைச்சரவை தீர்மானம்

மத்ரசாக்களை தடைசெய்ய முயற்சி 

நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் புனர்வாழ்வு என்ற பெயரில் எவரையும் கைது செய்து இரண்டு வருடங்கள் தடுத்து வைக்கும் சட்டம் நிறைவேற்றம்

தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் மு.காவை உள்வாங்காமை போன்றவற்றில்

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி  அரசாங்கத்தை நோகாமல் பார்த்துக்கொண்ட - 20க்கு கையுயர்த்திய  நீங்கள்  இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தையும் அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று நிறைவேற்றிக் கொடுத்திடுங்கள்.

அதனூடாக தலைவர் அஷ்ரபின் ஆன்மாவை குளிர வையுங்கள். 

இதற்காகத்தான் தனித்துவ அரசியல் சிந்தாந்தத்தை அவர் உருவாக்கினார்.

இதற்காகவே மரணித்தார்.

மறந்துவிடாதீர்கள்!

இந்த மாடு அறுப்பினை தடைசெய்யும் சட்டமூலத்தை நீங்கள் நிறைவேற்றிக்கொடுக்காது விட்டால் அது நீங்கள் மௌத்தான பின்னரும் கடனாக அமையும்.

7 comments:

  1. சூடு சொரண கெட்ட m.p.கள்....
    இவர்களின் நோக்கம் ஒன்றே....
    இருக்கும் காலம் உழைத்து தமது பையை நிறைப்போம்....
    மக்களின் நெருப்பு சும்மா விடாது....
    அது எறியும் நிச்சயமாக...

    ReplyDelete
  2. WEL SAID.MUSLIM IS THE OUR FIRST ENIMES.THEN ONLY OTHERS.
    OUR COUNTRY MUSLIMS POLITICIANS WILL ANYTHING FOR CASH N POST

    ReplyDelete
  3. ஐயா நீங்கள் மேலே சொன்ன விடயங்கள் எல்லாம் முஸ்லிம்கள் சம்பந்தமான அரசின் கொள்கைகள். விரிவாக விளக்கி வாசகர்களுக்கு சமர்ப்பித்ததையிட்டு பெரு மகிழ்ச்சி. இரண்டு கேள்விகள் முன்நிற்கின்றன.
    01 - மாடறுப்புச் சட்டம் நிறைவேறுவதற்கு இந்த முஸ்லிம் MP க்கள் உதவினால் அவரகளுக்கு என்ன கிடைக்கும்.
    02 - தாங்கள் இந்த சமயத்தில் ஒரு MP யாக இருந்திருந்தால் தங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. யாரும் குழம்பிப்போக வேண்டாம். அமுலாக இருப்பது பசு வதைச் சட்டம். நம் ஆட்களே காட்டிக்கொடுக்கப்போகிறார்கள்போல!

    ReplyDelete
  5. ALL MUUSIM(?) MP'S WHO SUPPORTED 20TH AMENDMENT ARE CURRENTLY FIGHTING AMONG THEM SELF TO GET AT LEAST A JUNIOR MINISTER POST THROUGH BASIL RJAPKASE.WHETHER IT IS ABOUT BANNING CATTLE SLAUTER OR EVEN CLOSING ALL BEEF STALLS THESE HUMAN CATTLE(MPS)WILL PUT UP BOTH HANDS IN SUPPORT OF ANY LAWS.THOPPY PRADIES-LIVE LONG SHAMELESS GUYS.

    ReplyDelete
  6. பங்கு பிரச்சினையா?

    ReplyDelete
  7. முஸ்லிம் பேரிளுள்ள முட்டாள் நாய்க்கூட்டம்

    ReplyDelete

Powered by Blogger.