Header Ads



சுங்கத் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகமாக சம்சுதீன் நியாஸ்


சுங்கத் திணைக்களத்தின்  மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச்சேர்ந்த சம்சுதீன் நியாஸ்பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சுங்கத் திணைக்களத்தில் சிரேஷ்ட பணிப்பாளராக இருந்த சம்சுதீன் நியாஸ் இம்மாதம்1ஆ ம் திகதி முதல் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி ஏற்றுள்ளார்

வெளி மாகாணங்களின் சுங்கப் பணிப்பாளராகவும் , சுங்கத் திணைக்கள நீதித்துறை பிரிவின் பிரதானியாகவும், பயணிகள் சேவை  பிரிவின் பிரதானியாகவும் கடமையாற்றிய இவர், சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்களுக்கு மேலான அனுபவம் உடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னாள் கல்விப் பணிப்பாளரும், பொத்துவில் முதல்வர் மர்ஹும் டாக்டர் ஜலால்தீனின் மூத்த சகோதரரும் அட்டாளைச்சேனை பிரதேசத முதல் பட்டதாரியுமான மர்ஹூம் சம்சுதீன், ரகுமத்தும்மா தம்பதிகளின்  கனிஷ்ட புதல்வரான இவர் , சட்டமானி (LLB ), சட்ட முதுமானி (LLM ) ஆகியவற்றில் சிறப்பு பட்டங்களைப் பெற்ற ஒரு சட்டத்தரணியுமாவார்.

ஆரம்பக் கல்வியை அல் முனீரா வித்தியாலயத்திலும் , அதன் பின்னர் சிறிது காலம் அட்டாளைச்சேனை மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்று பின்னர் தனது தந்தையுடன் யாழ்ப்பாணம் சென்று ஆறாம் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை யாழ் தெல்லிப்பழை மகஜன கல்லூரியில் கல்வி கற்றார் .

1983ஆம் ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சுங்க அதிகாரியாக 1984ஆம் ஆண்டு  நியமனம் பெற்ற இவர் , அதன் பின் படிப்படியாக முன்னேறி தற்போது மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

"CASE LAWS OF CUSTOMS" எனும் நூலின் ஆசிரியரான இவர் உத்தியோக ரீதியாகவும், திணைக்களத்தின் பிரதிநிதியாகவும் , நாட்டின் பிரதிநிதியாகவும் வெளிநாட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டுள்ளார்.

ஏ.பி.எம்.அஸ்ஹர்                                


3 comments:

  1. எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நியாஸ். அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் தங்கள் தந்தை சம்சுதீன் சேர் அதிபராக இருந்த போது பயின்றவனும் அவருக்கு ஆதரவாக இருந்தவனுமாகிய நான் அப்போதிருந்தே தங்களை அறிவேன். முகத்தில் புன்னகையும் அகத்தில் அன்புமாய் எப்போதும் காணப்படும் தங்களின் கடின உழைப்பும் நேர்மையும் வாய்மையுமே தங்களை இந்த உயர்ந்த பதவிக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். மீண்டும் மீண்டும் என் மனமாற வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு இன்னுமின்னும் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக! ஆமீன்!! -நிஃமத்.

    ReplyDelete
  2. எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நியாஸ். அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் தங்கள் தந்தை சம்சுதீன் சேர் அதிபராக இருந்த போது பயின்றவனும் அவருக்கு ஆதரவாக இருந்தவனுமாகிய நான் அப்போதிருந்தே தங்களை அறிவேன். முகத்தில் புன்னகையும் அகத்தில் அன்புமாய் எப்போதும் காணப்படும் தங்களின் கடின உழைப்பும் நேர்மையும் வாய்மையுமே தங்களை இந்த உயர்ந்த பதவிக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். மீண்டும் மீண்டும் என் மனமாற வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு இன்னுமின்னும் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக! ஆமீன்!! -நிஃமத்.

    ReplyDelete
  3. எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நியாஸ். அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் தங்கள் தந்தை சம்சுதீன் சேர் அதிபராக இருந்த போது பயின்றவனும் அவருக்கு ஆதரவாக இருந்தவனுமாகிய நான் அப்போதிருந்தே தங்களை அறிவேன். முகத்தில் புன்னகையும் அகத்தில் அன்புமாய் எப்போதும் காணப்படும் தங்களின் கடின உழைப்பும் நேர்மையும் வாய்மையுமே தங்களை இந்த உயர்ந்த பதவிக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். மீண்டும் மீண்டும் என் மனமாற வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு இன்னுமின்னும் உயர்ந்த பதவிகளை வழங்குவானாக! ஆமீன்!! -நிஃமத்.

    ReplyDelete

Powered by Blogger.